சேயோன் சேனை
உலகின் முதல் கடவுள் முருகன்
முருகனைக் கடவுளாகவோ அல்லது இனத் தலைவனாகவோ, மூதாதையாகவோ ஏற்றுக் கொண்டவர்கள் உலகம் முழுவதும் பரவி இருக்கின்றார்கள். இறைமறுப்பாளர்கள் கூட சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள வேல்போர்க் கொற்றவை சிறுவ (கொற்றவையின் மகன்) திருமுருகாற்றுப்படை - 258 , என்ற வரிகளை மறுப்பதிற்க்கில்லை.
தோராயமாக 20,000-ம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே முருக வழிபாடு இருந்து வந்துள்ளதற்குச் சான்றுகள் உள்ளன. முருகனை வேறு பெயரில் உலகின் பல நாடுகளில் வேற்று மதத்தினரும் அவரவர் மொழிகளில் வணங்குகின்றனர்.
- புத்தமதத்தில் - போதி சத்துவர்
- இலங்கை - கதிர்காமர்
- சீனா - வீய்த்துவோ தியான், வீய்த்துவோ பூசான்
- ஜப்பான் - இதாத்தன்
- கொரியா - விதா சேயோன
- மங்கோலியா - அர்வன் கோயோர் நூத
- தாய்லாந்து - பிராவத் போதிசத்துவா
- திபெத் - தோங் துருக்
- வியட்நாம் - விதா போதத்
இது போன்று தோராயமாக 100 ற்க்கும் மேற்பட்ட நாடுகளில் முருக வழிபாடு இருந்து வருகிறது. ஆனால் இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் கேரளாவின் சில பகுதிகளில் மட்டுமே வணங்கக் கூடிய கடவுளாக பல்வேறு வகையான நடைமுறைகளால் சுருக்கிவிட்டனர்.
சங்க இலக்கியங்களில் முருகன் (சேயோன்), முருகனின் தாய் கொற்றவை மற்றும் முருகனின் மனைவி வள்ளி இவர்களைத் தவிர வேறு எந்த கடவுளர்களின் பெயரும் குறிப்பிடப் படவில்லை.
முதற்கடவுள், இனத்தின் தலைவன், பண்டைத் தமிழரின் போர் தெய்வம் என்றும் அழைக்கப்படுகிறார்.
இனத்தமிழரின் அடையாள ஒருங்கிணைப்பாளராக கருதப்படுகிறார்.
முருகனின் ஆறு முனை நட்சத்திரம் தான் இஸ்ரேல் நாட்டின் கொடியில் உள்ளது.

மேலும் யூத, கிருத்துவ, இஸ்லாம், புத்த மற்றும் சமண மதங்களின் புனித சின்னமாக முருகனின் ஆறு முனை நட்சத்திரம் தான் உள்ளது.
முருகன் – இனத்தமிழரின் அடையாளம் முருகன், சிறு தெய்வம் அல்ல. தமிழனின் வரலாறு, இறையுணர்வு, பண்பாடு, சமூகம், போர்க்குணம்
இவை அனைத்தையும் ஒரே வடிவத்தில் உள்ளடக்கியவர்.


சேயோன் சேனை
சேயோன் சேனை என்பதன் நோக்கம்
சேயோன் சேனை என்பது முதற்கடவுள் முருகனை மையமாகக் கொண்டு, தமிழர்கள் மற்றும் பிற இனங்களில் அவர் பெற்றுள்ள மதிப்பையும், அவரைச் சுற்றியுள்ள வரலாற்று, சமய, கலாச்சார நிகழ்வுகளையும் ஒருங்கிணைக்கும் ஒரு பன்னாட்டு இயக்கமாகும்.
இந்த விரிவான முருகத் தொன்மையை உணர்த்தி தமிழர்களிடையே மீண்டும் விழிப்பூட்டுவது.
முருகனை உலக அரங்கில் தமிழரின் அடையாளமாக காட்டுவது.
தமிழர் வாழும் ஒவ்வொரு புலம், தேசம், சமூகத்தையும் முருக பக்தியால் ஒருங்கிணைப்பது.
சேயோன் சேனையின்– உயரிய நோக்கம் மற்றும்
இயக்கத்தின் செயல்பாடுகள் மிக எளியதும், தீவிரமானதுமானதும் ஆகும்.
இது ஒரு மதவாத இயக்கம் அல்ல. இது ஒரு பண்பாட்டு விழிப்புணர்வு இயக்கம்.
இது முருகனின் வழியாகத் தமிழனை தன் இன உயர்வை உணர்த்தும் விடுதலைப் போராட்டம்!
சேயோன் சேனை
உறுப்பினர்
"முருகனின் பெயரால் தமிழராய் ஒன்றிணைவோம். முருகனின் பெருமையை உலகம் அறியச்செய்வோம்."
மேலும் இந்த அமைப்பில் உறுப்பினராக இணைந்தது இந்த அரிய பணிக்கு ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம். இந்த அமைப்பில் மாநில, மாவட்ட மற்றும் உள்ளூர் பொறுப்பாளர் நியமிக்கப்பட உள்ளனர்.
முருகனின் தொன்மை, தமிழர் அடையாளம், கலாச்சாரம் ஆகியவற்றை மக்களிடையே விழிப்புணர்வாக பரப்புதல்.
மக்களுக்கு இயக்கத்தின் மதவாதம் இல்லாத பண்பாட்டு அடையாளத்தை விளக்குதல்.
உங்கள் பகுதியிலுள்ள உறுப்பினர்களை ஒருங்கிணைத்தல்.
நிகழ்வுகள், கூட்டங்கள், கருத்தரங்குகள் நடத்துதல்.
புதிய உறுப்பினர்களை இணைத்தல் மற்றும் அவர்களுக்கு திட்டங்களை விளக்குதல்.
உறுப்பினர்களுக்கான கலாச்சார மற்றும் வழிகாட்டு பயிற்சி நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல்.
முருகனை உலகுக்கு மீண்டும் அறிமுகப்படுத்தும் சேவையில், நீங்களும் ஒரு பங்குபெறுங்கள்!"
சேயோன் சேனை – தமிழரின் தெய்வீக எழுச்சி!
ஆமாம், இது “என்” கடமை – ஆனால் அது "நம்" கடமை!
சேயோன் சேனை, ஒரு ஒருங்கிணைந்த முயற்சி – அதில் ஒவ்வொருவரின் பங்களிப்பு தேவை.
உங்கள் மனதில் ஈர்ப்பு இருக்கிறது என்றால், இது ஒரு குறியீடு – முருகன் உங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்
சேயோன் சேனை
கோதண்டராமன், கோயம்புத்தூர், +91 63790 63804
enquiry@seyonsenai.online
© Copyright 2025 சேயோன் சேனை.